பாட புத்தகம் வழங்கல்
மந்தாரக்குப்பம்: கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி நன்கொடையாளர் மற்றும் வடலுார் டி.ஆர்.எம். சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.