திருக்கல்யாண உற்சவம்
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.