சேமகோட்டை பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்
கடலுார்: பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை மீனா வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்களிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தமிழ் ஆசிரியைகள் கோமதி, மணிமொழி போட்டியை ஒருங்கிணைத்து, வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டது.