உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒருவழிபாதையில் விதிமீறல் போக்குவரத்து பாதிப்பு

ஒருவழிபாதையில் விதிமீறல் போக்குவரத்து பாதிப்பு

புவனகிரி : பு வனகிரி ஒருவழி பாதையில் அனைத்து வாகனங்களும் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிதம்பரத்தில் இருந்து கீரப்பாளையம், புவனகிரி வழியாக விருத்தாசலம், சேலம், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட மார்க்கங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், இந்த சாலையில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களும் அதிகளவில் செல்கிறது. குறுகலான இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஒருவழிப்பாதையாக உள்ள இச்சாலையில் விதிமுறை கள மீறி வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, விதிமுறையை மீறி வாகனங்கள் செல்லாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடு க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ