உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காந்தி நகரைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், 42; ஆலிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர், 66, ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மோகன கிருஷ்ணன், சேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி