மேலும் செய்திகள்
ரமேஷ்குமார்-மஞ்சுளா இல்ல திருமண வரவேற்பு விழா
30-Nov-2024
வடலுார் தி.மு.க., சார்பில் வரவேற்பு
26-Nov-2024
மந்தாரக்குப்பம்: வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் இல்ல திருமண வரவேற்பு விழாவில், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.நாடார் மஹாஜன சங்க தலைவர் மற்றும் அரிமா சங்க மாவட்ட தலைவரும், டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூம் உரிமையாளர் ராஜமாரியப்பன்- சாந்தி தம்பதியர் மகன் இன்ஜினியர் சசிதரனுக்கும், செம்பனார்கோவில் சேர்ந்த ஆனந்தராஜ்-ஆனந்தி மகள் இன்ஜினியர் மதனாவுக்கும் கடந்த 27 ம் தேதி செம்பனார்கோவில் அபிராமி திருமண மஹாலில் திருமணம் நடந்தது.திருமண வரவேற்பு விழா, வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி திருமண மஹாலில் நடந்தது. விழாவிற்கு முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி தலைமை தாங்கினார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜா. தஞ்சாவூர் நல்லிகுப்புசாமி மகளிர் கலைக்கல்லுாரி சேர்மன் வெள்ளைச்சாமி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நாடார் உறவின் முறை அறக்கட்டளை தலைவர் வேல்சாமி வரவேற்றார். வள்ளலார் கோட்டம் திருஞானானந்த சுாமிகள் மணமக்களுக்கு அருளாசி வழங்கினார்.ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த், ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர், வேலன் குரூப் ஆப் கம்பெனிஸ் சிவசங்கர், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலுார் நகர்மன்ற சேர்மன் சிவக்குமார், வடலுார் நகர செயலாளர் தமிழ்செல்வன், நெய்வேலி நாடார் மகாஜனசங்க தலைவர் திருமால் கொழுந்து, செயலாளர் தியாகு மணிவண்ணன் , நாடார் மரவாடி கந்தராஜ், வழக்கறிஞர் வெங்கட்டரமண ராமலிங்கம், ஈஸ்வர் அசோசியேட்ஸ் ரவிச்சந்திரன், ஜி.எஸ்., ஆட்டோ ஸ்பேர்ஸ் கண்ணன், அம்மன் எசன்ஸ் மார்ட் ரவிந்தீரன், கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், டேக்கேர் நியூட்ரிஷன் சென்டர் வேல்முருகன், பிரேமா ஸ்டோர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசியல் கட்சியினர்கள், வியாபாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
30-Nov-2024
26-Nov-2024