மேலும் செய்திகள்
புத்தேரி கோவிலில் உறியடி திருவிழா
16-Sep-2025
திட்டக்குடி: புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையொட்டி நேற்று சிறப்பு திருமஞ்சனம், செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் சுவாமிகள் காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு, சுவாமி வீதியுலா நடந்தது. வரும், அக்டோபர் 4ம்தேதி மூன்றாம் சனிக்கிழமை பழ அலங்காரம், 11ம்தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.
16-Sep-2025