உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீர், மோர் பந்தல் திறப்பு

நீர், மோர் பந்தல் திறப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த வில்லியநல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் முன்னிலை வகித்தனர். பூத் கமிட்டி இணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.பாண்டியன் எம்.எல்.ஏ., நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் குட்டியாண்டி, பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், கிளை செயலாளர்கள் செல்வராஜ், வெங்கடேசன், மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை