மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
12-Nov-2024
கடலுார் ; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாராந்திர குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 501 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், துணை கலெக்டர் ரமா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Nov-2024