மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலைய கோரிக்கை நிறைவேறுமா
22-Oct-2024
மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்டமாகவும் உள்ளது. இதனைச் சுற்றி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனுார், அரியராவி, சவுந்திரசோழபுரம், செம்பேரி, தாழநல்லுார், கொத்தட்டை, பெ.பொன்னேரி, கொசப்பள்ளம், முருகன்குடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் கூரை வீடுகள் உள்ளன.கிராமங்களில் ஏற்படும் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில், மீட்பு பணிக்காக 15 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி, விருத்தாசலம் மற்றும் 20 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும். ஆனால் அதற்குள் சேதம் அதிகமாவதுடன் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கிறது. பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பது மட்டுமே உள்ளது. ஆனால் தீயணைப்பு நிலையம் அமைக்காமல் இதுவரை காணல் நீராகவே உள்ளது என மக்கள் புலம்பி வருகின்றனர்.எனவே, பெண்ணாடத்தில் காணல் நீரான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மாவட்ட அமைச்சர்கள், கலெக்டர், தீயணைப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Oct-2024