நகர்ப்புற நலவாழ்வு மையம் பயன்பாட்டிற்கு வருமா?
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகர்ப்புற நல வாழ்வு மையம் பயன்பாட்டிற்கு வருமா என கேள்வி எழுந்துள்ளது. நெல்லிக்குப்பத்தில் அண்ணாநகர், முள்ளிகிராம்பட்டு ஆகிய இடங்களில் தலா ரூ.27 லட்சம் மதிப்பில், புதியதாக நகர்ப்புற நலவாழ்வு மையம், இரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில் அண்ணாநகர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மட்டும் ஓராண்டுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு டாக்டர் மற்றும் செவிலியர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அப்போது, முள்ளிகிராம்பட்டு நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறக்கவி ல்லை. இதனால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், அந்த மை யம் பாழாகி வருகிறது. இதனால் அப்பகுதி நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.