உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு

குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு

ராமநத்தம் : ஆவட்டி அருகே குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த பெண் இறந்தார்.ஆவட்டி அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 35; இவரது மனைவி அம்சவல்லி, 30; கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது, 3 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அம்சவல்லி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை