உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விருத்தாசலம் : கூரை வீட்டிற்கு தார்பாய் போட்ட தொழிலாளி, மின்சாரம் தாக்கி இறந்தார்.விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்தவர் முருகன், 42. இவரது கூரை வீட்டில் மழைநீர் உள்ளே புகுந்ததால், மேற்கூரை மீது தார்பாய் போடும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.முருகனுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளார்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ