உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது 

கஞ்சா விற்ற வாலிபர் கைது 

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று பாசிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை மகன் மாயகிருஷ்ணன்,23; என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, மாயகிருஷ்ணனை கைது செய்து, 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை