தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்புகடத்துார்,:கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் கனல்வேந்தன் தலைமையில், டாக்டர் சரண்யா முன்னிலையில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவர்கள், தொழுநோய் எவ்வாறு பரவுகிறது? தொழு நோயின் அறிகுறி, நோய் பாதிப்பு ஏற்படுத்தும் தாக்கம், அதை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் பார்த்திபன், விக்னேஷ் மருந்தாளுனர் சந்தோஷ்குமார், செவிலியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.