உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மழைநீர் வடியாததால் வாகன ஓட்டிகள் அவதி

மழைநீர் வடியாததால் வாகன ஓட்டிகள் அவதி

அரூர்: அரூர்-சேலம் பைபாஸ் சாலையில், கச்சேரிமேட்டில் இருந்து நடேசா பெட்ரோல் பங்க் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டும் மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. தற்போது, பெய்யும் தொடர் மழையால், நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட சாலையின் பல இடங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் பெய்த மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால், மழைநீர் தேக்கத்தை தவிர்க்க, வலது பக்கமாக ஒதுங்கிச் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க, அதிவேகத்துடன் செல்லும் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள், தேங்கி நிற்கும் நீரை, சிதறடிக்கச் செய்கிறது. சாலையோரத்தில் பஸ்சுக்கு காத்திருப்பவர்க்ள மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும், தேங்கியுள்ள மழைநீரால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவமழையின் போதும், இத்தகைய பிரச்னை தொடர்ந்தாலும், சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்க துறை ரீதியான அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. சாலையில், மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, வடிகால் ஏற்படுத்தி மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை