உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு

அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு

அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டுநல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, மேல்பூரிக்கல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம், பள்ளி வகுப்பறைக்கு ஸ்மார்ட் போர்ட் அமைக்கப்பட்டது. இதனை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் அஞ்சலா, பா.ம.க., மாநில அமைப்பு செயலர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர் அறிவு, ஒன்றிய தலைவர் பச்சியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி