உள்ளூர் செய்திகள்

அரூரில் கனமழை

அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, தீர்த்தமலை, கீழானுார், செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, கைலாயபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. தீர்த்தமலையில், 97.2 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !