உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வார புதன்கிழமை-களில் நடக்கிறது. அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் பெறப்பட்ட, 67 மனுக்கள் மீதான பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ