உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி பெருமாள் கோவில்களில் பூஜை

தர்மபுரி: விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி தினத்தையையொட்டி, தர்மபுரியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.சயன ஏகாதசி தினத்தன்று, விஷ்ணு சற்று புரண் படுப்பதை பரி-வர்த்தன ஏகாதசி என்று சொல்வர். அதன்படி நேற்று பரிவர்த்தன ஏகாசி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், தர்மபுரி அடுத்த வர-தகுப்பம் வெங்கட்ரமண சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். பின், சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்-டது. இதேபோல், தர்மபுரி அபய ஆஞ்நேயர் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரண சுவாமி கோவில், பழைய தர்மபுரி லட்-சுமி நரசிம்மர் கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பரிவர்த்தன ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ