1,300 ஆண்டு பழமையான நடுகல் தீர்த்தமலை அருகே கண்டுபிடிப்பு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை அருகே மொண்டு-குழி கிராமம் உள்ளது. இப்பகுதியில், தர்மபுரி கலை மற்றும் அறி-வியல் கல்லுாரி பேராசிரியர் சந்திரசேகர், தஞ்சாவூர் தமிழ் பல்க-லைக்கழக முனைவர் பட்டம் ஆய்வாளர் பிரிதிவிராஜ், கல்-வெட்டு ஆய்வாளர் திருச்செல்வன், மாம்பாடி முனுசாமி, அரசு கலைக் கல்லுாரி மாணவர் சாய் இளந்திரையன், பேராசிரியர் முருகன், கவி, பழனிசாமி, தெய்வீக சிகாமணி ஆகியோர் களப்ப-ணியில் ஈடுபட்டனர். அப்போது, கிராம மக்கள் வழிபட்டு கொண்டிருந்த வேடியப்பன் சுவாமி நடுகல்லை ஆய்வு செய்தனர். அது, 7 மற்றும், 8ம் நுாற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிவித்தனர்.