28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்தர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மார்ச், 28 வெள்ளிக்கிழமை அன்று காலை, 11:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கவுள்ளது. இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வேளாண் தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை எடுத்துக் கூறி பயனடையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.