மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி
அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்த பெயின்டர் ஜனார்த்தனன், 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 25, எட்டு மாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.