உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பஸ் நிறுத்தத்தில் விபத்து அபாயம்

பஸ் நிறுத்தத்தில் விபத்து அபாயம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில், 9வது கி.மீ., துாரத்தில் கோபிநாதம்பட்டி கூட்-ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தென்கரைகோட்டை, மெணசி மற்றும் அரூர் செல்லும் இடங்களுக்கான பஸ் நிறுத்தம் வெவ்வேறு இடங்களில் இருந்தபோதும் ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், விபத்-துக்கள் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட நிறுத்-தத்தில் பஸ்களை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி