மேலும் செய்திகள்
சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆய்வு கூட்டம்
16-Sep-2025
அரூர், அரூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அரூர் உட்கோட்டத்தில் உள்ள சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.ஆய்வின்போது, எஸ்.பி., மகேஸ்வரன், டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர், போலீசார் உடனிருந்தனர்.
16-Sep-2025