பழங்குடியினருக்கான மேம்பாட்டு மன்ற உறுப்பினர் நியமனம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஸ்டான்லி முருகேசன், தமிழ்நாடு பழங்குடியினருக்கான மேம்-பாட்டு மன்ற உறுப்பினராக, தமிழக அரசால் நியமிக்கப்பட்-டுள்ளார்.தமிழக முதல்வரை தலைவராக கொண்டு, தமிழ்நாடு ஆதிதிரா-விடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில மேம்பாட்டு மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் உறுப்பினராக, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி கல்வி நிறுவனங்-களின் தாளாளர் ஸ்டான்லி முருகேசன் நியமனம் செய்யப்பட்-டுள்ளார். இவர், மேம்பாட்டு செயல்திட்டம் தொடர்பான கொள்-கைகள் மீது, அரசுக்கு ஆலோசனை வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு திட்டமிடுதல், நடவ-டிக்கை எடுத்தல், மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல், திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணித்தல், வழி-காட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, இதன் மூலம் ஸ்டான்லி முருகேசனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.