மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
12-Oct-2025
அரூர்: அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரிசங்கர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.கடந்தாண்டு, அக்., மாதம், அரூர் டி.எஸ்.பி.,யாக பொறுப்-பேற்று, ஓராண்டு ஆன நிலையில், கரிகால் பாரிசங்கர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சதீஸ்குமார் அரூர், டி.எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
12-Oct-2025