மேலும் செய்திகள்
முதியோர் காப்பக ஆண்டு விழா
17-Dec-2024
தர்மபுரி: தர்மபுரியில், பசுமையை பாதுகாக்கும் சமூக ஆர்வலர்கள், மாண-வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரியில் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், முப்-பெரும் விழா கேசவக்குமார் தலைமையில் நடந்தது. சூழியியல் ஆய்வாளர் கோவை சதாசிவம், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ஆகியோர் இயற்கையை பாதுகாத்தல், மரக்-கன்றுகள் நட்டு பராமரிப்பது குறித்து பேசினர். விழாவில் இயற்கை மீது ஆர்வம் கொண்டு, பசுமையை பாதுகாக்கும் சமூக ஆர்வலர்கள், மரக்கன்று நட்டு பராமரிக்கும் தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பல-ருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன. பசுமையை பாது-காக்கும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களின் பெற்றோர் மற்றும் மனைவிக்கு பசுமை நாயகி விருது வழங்கினர். பசுமை ஆசிரியர் சங்கர், முன்னாள் பள்ளிக்கல்வி துறை துணை இயக்-குனர் குணசேகரன், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பொன்-முடி, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்-ளிட்ட தமிழக முழுவதிலும் இருந்து சூழியியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
17-Dec-2024