வெற்றிலை விலை உயர்வு
கடத்துார்: கடத்துாரில் வெற்றிலை வாரச்சந்தை நேற்று நடந்தது. சுற்றுவட்டார, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை சந்தைக்கு கொண்டு வந்தனர். இதை வாங்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை, 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 21,000 ரூபாய் வரை விற்றது. நேற்று, 11,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 25,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 4,000 ரூபாய் விலை உயர்ந்தது. பொங்கலையொட்டி, 25க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனையானது. 6.25 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.