தர்மபுரியில் பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம், தர்மபுரி அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உட்பட, மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள், பாலக்கோடு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் மற்றும் கோவிந்தசாமி, முல்லை-வேந்தன், வெற்றிவேல் உட்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்.கூட்டம் முடிந்த பின், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராம-லிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:2026 தமிழக சட்டசபை தேர்தலில், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க இணைந்து பணியாற்றுவது என, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்-டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்த, தமிழ-கத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் பழனிசாமியை முதல்வராக அமர வைக்க, இணைந்து பணியாற்ற முடிவு செய்-யப்பட்டது. 1967 தேர்தலில், காங்., ஆட்சியை அகற்ற அண்ணா-துரை, ராஜாஜி மற்றும் சிறு கட்சிகள் கூட ஒன்றிணைந்து தேர்-தலை எதிர்கொண்டனர்.மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில், 1,700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 1,412 பேர் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள். அதற்-காக தான் மதுவிலக்கு டி.எஸ்.பி.,-யின் வாகனத்தை பறித்ததுடன், அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சீமான், கிருஷ்ணசாமி, ராமதாஸ், அன்புமணி, விஜய் போன்ற-வர்கள் இதுபோல நடக்கக்கூடாது என நினைத்தால், அ.தி.மு.க.,-வுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,-வால் தான் முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.