உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கல்லுாரியில் வகுப்புகள் துவக்கம்

அரசு கல்லுாரியில் வகுப்புகள் துவக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நேற்று முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. புதிதாக கல்லுாரிக்கு வரும் மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு வழங்கி, பேராசிரியர்கள், 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்கள் வரவேற்றனர். இம் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து அரசின் திட்டங்கள், கல்லுாரி சார்ந்த தகவல்கள், விதிமுறைகள் குறித்து, ஒரு வார காலம், அறிமுக பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை