உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி;தர்மபுரியில், மாவட்ட போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் சார்பில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சைபர் கிரைம், அவசர காவல் உதவி, மாவட்ட மதுவிலக்கு உள்ளிட்ட, பல்வேறு போலீஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் கொண்ட பதாகைளை ஏந்தி, 100க்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர்.மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி, செந்தில்நகர் வழியாக இலக்கியம்பட்டி வரை சென்று, மீண்டும் செந்தில் நகர், கலெக்ட்ரேட் வழியாக தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியை சென்றடைந்தது. ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன், டி.எஸ்.பி., ரமேஷ் உள்பட போக்குவரத்து போலீசார் பலர் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி