உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர், ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழநாடு அரசு சார்பில், அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் ( குழந்தைகளில் பெற்றோர் மாற்றுத்திறனாளி, சிறையில், நோய்ப்பட்டு இருந்தல்) ஆகியோர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆதார், குழந்தையின் வயது சான்று நகல், வங்கி கணக்கு புத்தகத்துடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி