உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முத்துமாரியம்மன் கோவிலுக்கு புனித நீர் எடுத்து சென்ற பக்தர்கள்

முத்துமாரியம்மன் கோவிலுக்கு புனித நீர் எடுத்து சென்ற பக்தர்கள்

போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் அடுத்த, எம்.சவுலுார் கிராமத்தில் உள்ள முத்-துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கவுள்-ளது.இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு வினாயகர் பூஜை செய்து, பென்னேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் புனித நீர் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், கங்கணம் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பென்னேஸ்வரமடம் ஆற்றில் பம்பை, உடுக்கை முழங்க, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து சென்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ