உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பயன்பாட்டிற்கு வந்த மின் தகனமேடை

பயன்பாட்டிற்கு வந்த மின் தகனமேடை

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், 1.51 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கடந்த, 2023 - 24ல் கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இது குறித்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறியதாவது: பொ. மல்லாபுரம் பேரூராட்சி, பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைந்துள்ளது.இதை போதிமரம் அறக்கட்டளை மூலமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இறந்தவர்களின் உடல் எரிப்பிற்கு சேவை கட்டணமாக, 3,700 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை