குருவம்பட்டியில் மின் கம்பங்கள் அமைப்பு
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட குருவம்பட்டியில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, புதிதாக மூன்று தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.