உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / யானைகளால் அவரை தோட்டம் நாசம்

யானைகளால் அவரை தோட்டம் நாசம்

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் ஆலஹள்ளி காப்புக்காட்டில், 4 யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.இதேபோல், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவர்பெட்டா காப்புக்காட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 3 யானைகள், ஒட்டர்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தன. அவற்றை விரட்ட வந்த வனத்துறையினர் ஜீப்பை தாக்குவது போல், அதன் அருகே யானைகள் சென்றன.வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியதால், லோகேஷ் என்பவரது அவரை தோட்டத்தின் வழியாக யானைகள் சென்றதில், சாகுபடி செய்திருந்த அவரை செடிகள் நாசமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை