உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இன்று கண் பரிசோதனை

இன்று கண் பரிசோதனை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், இன்று (மார்ச், 7) காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, பொது மருத்துவம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடக்கும் முகாமில், பொது மருத்துவம் மற்றும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் அழகரசன், வனச்சரக அலுவலர் கோகுல், ஓய்வு பெற்ற கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி