வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
வரும் 25ல் விவசாயிகள்குறைதீர் நாள் கூட்டம்தர்மபுரி, அக். 22-தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் அக்., 25 வெள்ளிக்கிழமை அன்று, 11:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை எடுத்து கூறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.