உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போதை மகனை அடித்து கொன்ற தந்தை கைது

போதை மகனை அடித்து கொன்ற தந்தை கைது

பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஊட்டமலையை சேர்ந்தவர் முருகன், 59. இவரது மகன் சந்தோஷ், 32. இருவரும் பரிசல் ஓட்டிகள். சந்தோஷ் மனைவி சிவரஞ்சனி. இவர் தன் இரு குழந்தையுடன், தாய் வீடான ஏமனுாரில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சந்தோஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றிய நிலையில், முருகன் இரும்பு கம்பியால் மகனை தாக்கியுள்ளார். இதில், சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.அப்போது வெளியே சென்று வீடு திரும்பிய அவரது தாய் சுசீலா, மகன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சந்தோஷை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். ஒகேனக்கல் போலீசார், முருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி