அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கான திரைப்படம்
தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலை பள்ளியில், தேசிய பசுமைப்படை மற்றும் மகிழ் முற்றம் சார்பாக, மாணவ, மாணவியருக்கு, 'மரங்களின் கனவு' என்ற திரைப்படம் திரையி-டப்பட்டது. இதில், பள்ளியின் பொறுப்பாசிரியர் விக்ரமன் தலைமை வகித்து, திரைப்படத்தின் நோக்கம் குறித்து எடுத்து-ரைத்தார். தொடர்ந்து நடந்த வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில், இருபால் ஆசிரியர்கள், பள்ளி திரைப்பட மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பா-ளர்கள், தேசிய பசுமைப்படை மற்றும் மகிழ் முற்றம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.