உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடு விற்பனை மந்தம்

ஆடு விற்பனை மந்தம்

நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் செவ்வாய்கிழமைகளில் வாரச்சந்தை நடப்பது வழக்கம்.அதன்படி, நேற்று அதிகாலை ஆட்டு சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்க, விற்கவும் வந்திருந்தனர்.புரட்டாசி மாதம் என்பதால், நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 200க்கும் மேற்பட்ட ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.இதில் ஆடுகள், 4,000 முதல், 18,000 ரூபாய் வரை என, 20 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை