கட்டட மேஸ்திரி கொலை மனைவியிடம் விசாரணை
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுகாரம்பட்டியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம், 47, கட்டட மேஸ்திரி. இவர் மனைவி பொன்னுருவி. இவர்களுக்கு, மூன்று மகள்கள், மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க சென்றவர், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், வீட்டின் அருகே புதரில், உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.அதில், சிவபிரகாசத்தை கத்தியால் குத்திக் கொலை செய்த பின், 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்று, புதரில் வீசியது தெரிந்தது. சிவபிரகாசம் வீட்டின் அருகே கொலை நடந்துள்ளதால், சந்தேகத்தின்படி, அவரின் மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.