உள்ளூர் செய்திகள்

2 பெண்கள் மாயம்

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மலையப்ப நகரை சேர்ந்த அனுசுயா, 24. இவருக்கு கடந்த, 2 ஆண்டுக்கு முன், வெங்கடாசலம் என்பவருடன் திருமணம் ஆனது. கடந்த, 8 அன்று அனுசுயா மாயமானார். கணவர் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* பொம்மிடி அடுத்த பொ.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சம்பத்குமார், 29. தனியார் பால் நிறுவன ஊழியர். இவரது மனைவி மைவிழி, 24. இவர்களுக்கு, 3 வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 9ல் மைவிழி மாயமானார். புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி