புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட உரிமை-யியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இங்-குள்ள நீதிமன்றங்கள், 2008ல் தொடங்கி, 17 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் எவ்வித வசதிகள் இன்றி செயல்பட்டு வரு-கிறது. இதனால் வழக்கு சம்பந்தமாக வருவோர், போலீசார் அவதிப்படு-கின்றனர். நீதிமன்ற கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்-டது. இருந்தபோதும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை. வக்கீல்கள் சங்கத்தினர் பலமுறை அதிகாரிகள், அமைச்சர்களிடம் முறை-யிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆகவே, விரைவாக நீதிமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வக்கீல்கள் கடந்த,ஒரு வாரமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பணிகள் பாதிக்-கப்பட்டன. இந்நிலையில் நேற்று சார்பு நீதிமன்றம் முன் வக்-கீல்கள் சங்க தலைவர் கோபி தலைமையில், கட்டடம் கட்ட நிதி ஒதுக்ககோரி, 60க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து வக்கீல் கோபி கூறுகையில், ''பாப்பிரெட்டிப்பட்-டியில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட வேண்டும். இல்லையெனில் வரும், 10 முதல் உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.