மழையால் ஆடு விற்பனை சரிவு சந்தை வியாபாரிகள் வேதனை
பாப்பிரெட்டிப்பட்டி, நபாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி வடசந்தையூரில், வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு கொங்கணாபுரம், ஓமலுார், ஏற்காடு, கணவாய்புதுார், அரூர், கம்பைநல்லுார், திப்பம்பட்டி, கடத்துார், வத்தல்மலை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால் நேற்று அதிகாலை முதல், மழை பெய்து கொண்டே இருந்ததால், ஆடுகள் வாங்க பெரும்பாலானோர் வரவில்லை. இதில், 10 கிலோ கொண்ட ஆடு, 8,000 ரூபாய் முதல், 15,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம், 30 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்ற நிலையில், நேற்று நடந்த சந்தையில், 15 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.