சாலையின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு
பென்னாகரம் :பென்னாகரத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 வழி சாலையை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளையும், நடந்து முடிந்த ஒகேனக்கல் - பென்னாகரம் பணிகளையும், சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புபொறியாளர் சசிகுமார் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் ஆகியோர்பார்வையிட்டனர்.