உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கவிழ்ந்தது ஆம்னி பஸ் டிரைவரிடம் விசாரணை

கவிழ்ந்தது ஆம்னி பஸ் டிரைவரிடம் விசாரணை

ராயக்கோட்டை:ராயக்கோட்டை அருகே, ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில், டிரைவர் கைது செய்யப்பட்டார். மதுரையிலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு நோக்கி எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் சென்றது. தர்மபுரி - நெரலுார் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அன்று அதிகாலை, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட பயணியர் காயமடைந்தனர். பஸ் பயணியான விருதுநகர் மாவட்டம், சொக்கம்பட்டி தாமரகனி, 31, என்பவர் புகார் படி, பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி சென்று கவிழ்த்ததாக, சிவகாசியை சேர்ந்த டிரைவர் அஜய்ராஜ், 35, என்பவரை, ராயக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை