உணவு பொருளில் கலப்படம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
பென்னாகரம்: பென்னாகரத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக, உணவு பொருளில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு நேற்று நடந்தது. பென்னாகரம், மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்-துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, பென்-னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு சார்ந்து, அரங்கம் அமைத்திருந்தார். அதில், உணவு பாதுகாப்பு, உணவு பொருள் பாக்கெட்டு-களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து முக்-கியமாக, பொட்டலம் இடப்பட்ட உணவு பொருட்-களில், உணவுப்பொருள் பெயர், தயாரிப்பு முக-வரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாது-காப்பு உரிமம் எண், எடை, எண்ணிக்கை, உட்கார-ணிகள் ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் அலர்ஜி தன்மை குறித்து தெளிவாகவும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு செய்தார். மேலும், பொதுமக்கள், பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஆகியோர் முன்னி-லையில், கலப்பட பொருட்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என செயல்விளக்கமும் அளித்தார்.