உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடல்

புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடல்

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 6-- -தர்மபுரி மாவட்டம், கடத்துார்---அரூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், இரு ரயில் பாதைகளுக்கும் இடையே கான்கிரீட் தரைத்தளம் சீராக இல்லாமல் மேடும், பள்ளமுமாக இருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த, 1ல், சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சஞ்சீவி, பகுதி உதவி பொறியாளர் ஜவஹர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் ரயில்வே கேட் பகுதியில், பராமரிப்பு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்காக ரயில்வே கேட் இன்று, (6ல்) காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை பலகை, ரயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள் வேறு சாலையில் செல்லுமாறு ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ